ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Saturday, December 20, 2008

என்னால் இயன்றது

என்னால் இயன்றது
நிச்சயமாக சொல்லமுடியும்
தொடரும் செல்(cell) லடி சப்தம்
தாளாது அழும் கைக்குழந்தைக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
எந்த நாடும்
எந்த இயக்கமும்
முக்கியமாக
எந்த மொழியும்


எம் இறையாண்மையை
பாதுகாக்கும் பொருட்டு
என்னால் இயன்றது
இனி இந்த
உறக்கமற்ற இரவில்
பரத்தையின் முலையை
நகங்களால
காயப்படுத்த மட்டுமே



--இலக்குவண