ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, December 04, 2008

வன்கொடுமையில் வாழும் மனது...

வன்கொடுமையில் வாழும் மனது...
# செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

பூமலரும் பொழுதுகளில்
புல்லாங்குழல் இன்னிசையில்
பனித்துளியின் புதுப்பொலிவில்
பேரின்பப் பெருவெளியில்
வெண்ணிலவின் தண்ணொளியில்
பெண்ணவளின் கண்ணசைவில்
கொடியிடையின் நடையழகில்
இடைதாண்டும் ஜடையழகில்
மின்மினியின் கண்சிமிட்டலில்

வந்து விழும் வரிகள் அறியா(து)
வன்கொடுமையில் வாழும் மனது.

o