ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Monday, March 06, 2006

முடிவுகள் -ஈரோடு தமிழ்ன்பன்

நதிகள்
கடல்களை எனக்குள்
திறந்து வைத்து
அலறும் தீவுகளையும்
காட்டின

கரும்புகள்
பூவினங்களை எனக்குள்
மலர்வித்து
முள்களின் முனைகளில்
காத்திருக்கும்
குத்தல்களின் முகங்களையும்
காட்டின

நட்சத்திரங்கள்
சூரியர்களை
எனக்குள்
பிறப்பித்து
கண் விழித்த காந்தப்புயல்
மய்யங்களையும்
நிறுவின

வைகறைகள்
பகல்களை எனக்குள்
பயிரிட்டு அறுவடைக்கு வரும்
அந்திகளின் கைகளில்
என் முகவரியும்
தந்தன

எழுத்துகள்
கவிதைகளை எனக்குள்ளே
இயற்றிவைத்து
மயக்கங்களையும்
அர்த்தங்களின் கைகளிலேயே
ஒளித்து வைத்தன

நான்
வாழ்க்கையை எனக்குள்ளே
உயிர்ப்பித்தூப்
பறித்து வந்த
மரணத்திற்கும்
கதவைத்
திறந்து வைத்தேன்.

Friday, March 03, 2006

கன்னடக் கவிதைகள்

கன்னடப் பாட்டு
ஜி.பி. இராசரத்தினம்

கள்ளு
பொண்டாட்டி
கன்னடப்பாட்டு
இது மூணுன்னா
எனக்கு
உசிருங்க

மூக்குப் புடிக்க
கள்ள
உள்ள
ஊத்திகிட்டேன்னு
வையுங்க
அம்புட்டுதா
அம்பு மாதிரி
சரஞ்சரமா அய்யாவுக்கு
வந்துகிட்டே இருக்கும்
கன்னடப்
பாட்டு

எக்குத்தப்பா
எறங்கி வந்து
எம்முன்னால
சாமி கீமு
தீடீர்னு
நின்னாருன்னு
வச்சுக்கிங்க
ஏதோ நம்மள சோதிக்கதா
வந்திருக்காருன்னு
நெனச்சிக்கிட்டு
என்னா சாமிம்பேன்!

இன்னியோட
கள்ளு
உட்டுர்றா
ராசரத்தினம்னு
எங்கிட சாமி
கேட்பார்ன்னா
முந்திரிக்கொட்ட மாதிரி
மூக்கு
முந்திகிட்டு வந்து
அது எப்படி சாமி
அவசரமா உடமுடியும்ன்னு
அழும்பு பண்ணிச்சின்னு
வச்சிக்குங்க

அந்த
மூக்க அப்பவே
ஆறேழுதுண்டா
அறுத்து போட்ருவேன்

கள்ளோடு சேத்து
ஒம் பொண்டாட்டியையும்
உட்டார்றான்னா
கேட்டார்ன்னா
நல்லாதாப் போச்சு சாமின்னு
நடுத்தெருவுன்னும் பாக்காம
ஆடிக் கும்மாளம் போட்டுடுவேன்

அப்படியே அந்தக்
கன்னடப் பாட்டு பாட்றதையும்
விட்டுர்றா;
ராசரத்னம்னு
சாமி கேட்டுச்சுன்னு
வச்சுக்குங்க

கெட்டது கத அடுத்த நிமிடமே
ஆண்டவனுக்கு வச்சிடுவேன்
ஆப்பு

எம்மாம் பெரிய மனுசனாத்தான்
இருக்கட்டுமே
ஏன்...
ஆனானப்பட்ட அந்த
ஆண்டவனாவேதா
இருக்கட்டுமே

எங்
கன்னட மொழியைப் பத்தி
அப்பிடி இப்பிடி
ஏதாச்சும் பேசுனாங்கன்னா
அசிங்க அசிங்கமாப் பேசி
மானத்த வாங்கிப் புடுவேன்
வாங்கி...

நரகத்துல தள்ளி
நாக்கப் புடுங்கிப்புட்டு
என்னோட வாயையும்
தச்சுப் போட்டாலுஞ் சரி

முக்கி முக்கி
எம் மூக்காலயாவது
பாடிப்புடுவேன்
எங் கன்னடப் பாட்ட

கள்லு பொண்டாட்டி
எதுனாலுஞ்சரி
இந்த உலகத்துல
இல்லாம போவட்டும்

ஆனா
உலகம் இருக்கிற வரைக்கும்
எங் கன்னடப்பாட்டு வாழட்டும்

மேலும் பல சிறப்பான கவிதைகள் நிறைந்த தை இதழைப் படியுங்கள்

Wednesday, March 01, 2006

நாகலாபுரத்தான் கவிதைகள்

காற்று
அந்த வெற்றுக் காகிதத்தை
ஏதோ ஒரு திசையின்
விளிம்பிற்குத் துரத்துகிறது
உனக்கான கவிதையுடன்
உலகத்திற்கு வெளியே
காத்திருக்கிறேன்
*

நதியின் ஆழத்தில்
பழகிக் கொண்டிருக்கிறேன்
பிரிவதற்கு