Wednesday, March 01, 2006

நாகலாபுரத்தான் கவிதைகள்

காற்று
அந்த வெற்றுக் காகிதத்தை
ஏதோ ஒரு திசையின்
விளிம்பிற்குத் துரத்துகிறது
உனக்கான கவிதையுடன்
உலகத்திற்கு வெளியே
காத்திருக்கிறேன்
*

நதியின் ஆழத்தில்
பழகிக் கொண்டிருக்கிறேன்
பிரிவதற்கு