ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, February 09, 2006

உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என்றான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். அந்தத் தமிழ்ப்பால் பொங்கத் தொடங்குகிறது தை.

தமிழ்க்கவிதை பல ஆயிரம் வயதுகளையுடையது. பல அடுக்குகளைக் கொண்டது. எல்லா அடுக்குகளுக்கும் இடம் கொடுத்தவை கண்ணதாசன், வானம்பாடி, அன்னம் போன்ற இலக்கிய இதழ்கள். அந்த இலக்கியப் பெருந்தன்மை இன்றுள்ள இலக்கிய இதழ்களுக்கு இல்லை. ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து எழுத வைத்து அவர்கள் மட்டும்தாம் கவிகள் என்று அவை நிறுவ நினைக்கின்றன.

ஆனால், இப்போதுதான் தமிழ்க்கவிதைகள் தனித்த அடையாளங்களோடு வான் பார்த்துக் கிளை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அந்த மரங்களின் கிளைகளில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகத் தொட்டில்கள் ஆடுகின்றன. உழுத களைப்போடு வந்து பசியாற தூக்குச் சட்டிகள் கஞ்சியோடு காத்திருக்கின்றன.

வீட்டுக்குள் கவிதையை ஒரு போன்சாய் போல வளர்க்கும் குழு மனப்பான்மை கொண்ட அந்த வெள்ளைக் கவிஞர்களுக்கு இந்தப் பெருமரங்களின் வளர்ச்சி அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த மரங்களின் வேர்களால் தங்கள் வீட்டுச்சுவர்களில் விரிசல் விழுமோ எனப் பயந்து நடுங்குகிறார்கள்.

எல்லா ஒடுக்குமுறைகளையும், மூடுதிரைகளையும் கடந்து ஒதுக்கப்பட்ட சாதியின் குரலும் ஒடுக்கப்பட்ட பெண்ணியக் குரலும் இன்றைய கவிதையின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், தமிழ்த் தேசியம் சார்ந்து எழும் இன்றைய காலத்தின் குரலைப் பதிவு செய்வதற்காகவே வருகிறது தை.

தமிழில் தனித்த அடையாளங்களோடு எழுத வருகிற புதிய கவிஞர்களை உலகத் தமிழர்களுக்கெல்லாம் தை அறிமுகப்படுத்தும். மறைக்கப்படும் இலக்கிய வரலாற்றை நேர்படுத்தும். இலக்கிய நேர்மையோடு ஒரு முழுமையான கவிதை இதழாகத் தொடரும்.

புதிதாக எழுத வருகிறவர்களுக்கும் புரிதலோடு எழுதுகிறவர்களுக்கும் இடையில் ஒரு தமிழ்ப்பாலமாய் தை இருக்கும்.

வாருங்கள் கை கோத்து நடப்போம்.

-அறிவுமதி-