ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Monday, February 20, 2006

முத்துவேல் கவிதைகள்

சுயசரிதை

திருமணத்திற்கு முன்பான
புணர்ச்சித் திருடர்களின்
விடுதி இரவுகளில்
ஒழுகிய உயிரணுக்கள்
என்னைச் செய்திருக்கலாம்

சதை சலித்துக்
காதல் துப்பிய
கள்வனை வெறுத்து
மறுவாழ்வு விரும்பி
மகாராசி யாரோ
யோனியிலிருந்து பிடுங்கி
கோயில் வாசலில்
கிடத்திப் போயிருக்கலாம்.

மெய் விற்று
உயிர் சேமிப்பவளின்
ஒழுக்குக் குடிசையின்
காலொடிந்த கட்டிலில்
ஆணுறை மறந்த எவனோ
எனக்கு அப்பாவாகி
முடித்த அலுப்பில்
புகை ஊதிய படியே
நடந்திருக்கலாம்.

உலகத்துக்குப் பயந்த
உடைந்த நெஞ்சுக்காரி
யாரோ ஒருத்தி
கட்டும் துணியில் சுத்தி
குப்பைத் தொட்டியில்
வீசி விரைந்திருக்கலாம்

எதற்கோ ஏனோ
எங்கய்யோ எப்போதோ
நிச்சயம்
ஒருத்தி முந்தானை
விரித்திருக்க வேண்டும்
ஒருவன் மூச்சு
வாங்கியிருக்க வேண்டும்

இப்போது உங்கள் மனதை
குண்டூசி தைத்துத் தாக்கலாம்
நீங்களாகக் கூட
இருக்கக் கூடும்
எனது அப்பாவாகவோ
அம்மாவாகவோ.