ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, February 09, 2006

நீங்கள் துளி, நாங்கள் சமுத்திரம்

29 ஆவது புத்தகக் காட்சியில் ''சிற்பி பாலசுப்ரமணியம்'' பேச்சு.

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் 29வது புத்தக்காட்சி நடக்கிறது. இதில் 'தமிழ்க் கவிதை மாற்றமும் தடுமாற்றமும்' என்ற தலைப்பில் சிற்பி பாலசுப்ரமணியம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

இன்றைய புதுக்கவிதையாளர்கள் பாரதியாரை பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும் கூட பாரதிதாசனை ஏற்றுக் கொள்வது இல்லை. பாரதிதாசனின் படைப்புகளைப் பரிசுத்தக் புதுக்கவிதையாளர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. பாரதிதாசனின் கவிதைகள் தமிழ்மொழியின் பண்பாட்டையும், பெருமைகளையும் உயர்த்திப் பிடிப்பவை. அது தமிழ்மொழி வெறியல்ல. தற்போது தமிழ்மொழிப் பற்றை சில புதுக்கவிதையாளர்கள் கிண்டல் செய்கிறார்கள்.மொழி உணர்ச்சி தமிழர்களிடம்தான் கேலிக்குரியதாக உள்ளது. இதை இந்திக்காரர்களிடமோ, கன்னடக்காரர்களிடமோ பார்க்க முடியாது. புதுக்கவிதையாளர்கள் பாரதிதாசனை எப்பொழுது ஏற்றுக் கொள்கின்றனரோ, அப்பொழுதுதான் அவர்களுடைய கவிதையும் மக்கள் கவிதையாக மாற முடியும். பாரதிக்கு பிறகு ஞானக்கூத்தன் மட்டும்தான் கவிஞர் என்று ஒரு புதுக் கவிதையாளர் கூறும் வேடிக்கை தமிழகத்தில் நடக்கிறது.

தமிழ்ஒளி, சா.து.சு. யோகியார் போன்ற கவிஞர்களைப் புதுக் கவிதையாளர்களுக்குத் தெரியாது. கம்பதாசன் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இப்படிப்பட்ட முன்னோர்கள் பற்றி தெரியாதவர்களை மூடர் என்றுதான் கூறுவேன். புதுக் கவிதைகளில் மூட நம்பிக்கை நிரம்பிக் கிடக்கிறது. செய்தி சொல்லும் கவிதையை கவிதை இல்லை என்று சொன்னால் இளங்கோவையும், கம்பரையும், பாரதியையுமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டி இருக்கும். புதுக்கவிதை என்றால் மரபு எதிர்ப்பு, யாப்பு எதிர்ப்பு, என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு ஆப்பு என்றால் தெரியும். யாப்பு என்றால் தெரியாது. தெரியாது என்பதாலேயே அதை மறுக்கின்றனர். பரிசுத்த புதுக்கவிதையாளர்களின் கவிதைகளில் எதிர்மறை செய்திகள் இருக்கின்றன. அதில் சமூகத்தை நேசிக்கிறவர்கள் இகழப்படுகின்றனர்.

நீங்கள் ஒரு துளி. நாங்கள் சமுத்திரம்.

(நன்றி- தினகரன்)